tamilnadu

img

அச்சம் தணியும் வரை தனித்திருப்போம்: ஸ்டாலின்

சென்னை, மார்ச் 31- கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம் என்று பொதுமக்களுக்கு திமுக தலை வர் மு.க. ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியி ருப்பதாவது:-

பிரதமர் மோடி மார்ச் 22 ஆம்  தேதி அறிவித்த ‘மக்கள் ஊர டங்கு’, அதன்பிறகு தமிழக அரசு அறிவித்த ஏப்ரல் 1ஆம் தேதி வரையிலான 144 தடை உத்தரவு ஆகிய அறிவிப்புக ளின்போதே, அதன் அவசியத்தை மனமார வரவேற்றோம். அதே நேரத்தில், அதனால் ஏழை எளிய சராசரி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு  எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதையும் நினைகூட்டி னோம். அமைப்பு சாரா தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையை மனதில்  கொண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்கு வார்கள் என்ற முடி வெடுத்து அறிவித்தோம்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்க ளும், மக்களவை உறுப்பினர் களும், முதலமைச்சர் நிவாரண  நிதிக்கு தங்கள் ஊதியத்தி லிருந்து நிதி வழங்கி, மக்களைக்  காக்கும் பணியில் தங்களின்  பங்களிப்பைச் செலுத்தினர். அரசியல் கண்ணோட்டங்களை அகற்றி ஒதுக்கி வைத்து, கொரோனா குறித்த விழிப்பு ணர்வு மற்றும் பாதுகாப்பு பணி யில் முழு மனதுடன் மத்திய,  மாநில அரசுகளின் ஆக்கப் பூர்வ மான நடவடிக்கைகளுக்கு ஒத்து ழைப்பு வழங்குகிறது. முன் கூட்டியே ஆலோசனைகளைத் தெரிவிக்கிறது.

தமிழக அரசுக்குத் தேவை யான நிதியை மத்திய அரசு வழங்க  வலியுறுத்துகிறது. மத்திய அர சின் உள்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களும் இதில் கவனம் செலுத்த  வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டு கிறது. கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம்; மனத்திடத்துடன் துணிந்திருப் போம்; எந்நாளும் மக்களுக்குத் துணையிருப்போம். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.